மேலும் 21 கடற்படை சிப்பாய்கள் பூரணமாக குணமடைந்தனர்!

navy
navy

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 21 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இதுவரை 811 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 1562 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் இதுவரை 2001 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.