மேலும் 171 இலங்கையர்கள் தாயகம் திரும்பினர்

srilankanairlines1 765x510 1

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக லெபனானில் சிக்கியிருந்த 171 இலங்கையர்கள் விசேட விமானம் மூலம் தாயகம் திரும்பியுள்ளனர்.

ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் மூலம் அவர்கள் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்தனர்.

குறித்த அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.