வேட்பாளர்களை நிர்வாகிகளுக்கு அறிமுகப்படுத்தும் கூட்டம் இன்று (26) பிற்பகல் 3:30 வடமராட்சி நெல்லியடி மாலுசந்தி பிள்ளையார் கல்யாண மண்டபத்தில் உடுப்பிட்டி தொகுதி தலைவர் ப.சுரேந்திரன் மற்றும் பருத்தித்துறை தொகுதி உப தலைவர் ச.சுகிர்தன் ஆகியோர் தலமையில் இடம் பெறுகிறது.
இதில் தமிழரசு கட்சி வேட்பாளர்களான திருமதி ரவிராஜ் ,சி.சிறிதரன், த.தபேந்திரன்,ஈ.சரவணபவன், மாவை சேனாதிராசா, இமானுவேல் ஆனோல்ட், ஏ.சுமந்திரன் ஆகியோரும் பருத்தித்துறை , உடுப்பிட்டி தொகுதி தமிழரசு கட்சி நிர்வாகிகள் செயற்பாட்டாளர்கள் என சுமார் (100) பேர் வரை கலந்து கொண்டுள்ளனர்.