தனியார் கல்வி வகுப்புக்கள் மீண்டும் ஆரம்பம்.

unnamed 1 6

கொரோனா அபாயம் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட தனியார் கல்வி வகுப்புகள் இந்த மாதம் 29 ஆம் திகதி மீண்டும் தொடங்கும் என்று அனைத்து இலங்கை போதனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசு மற்றும் சுகாதாரத் துறையின் பரிந்துரைகளின்படி கல்வி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன என்று சங்கத்தின் ஊடகப் பிரிவின் தலைவர் திருஞ்சய கமலத் தெரிவித்தார்.

மாணவர்கள் ஒரு மீட்டர் இடைவெளியை பேணுவதுடன், முகக்கவசம் அணிவது கட்டாயமாகும் என்று கம்லத் கூறினார்.

அத்துடன், வகுப்புக்களில் 500 மாணவர்களை உள்ளீர்க்க சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனுமதித்துள்ளதாகவும் தெரிவித்தார்.