முகக்கவசம் அணியாவிட்டால் 14 நாள் தனிமைப்படுத்தல்: நாளை முதல் புதிய நடைமுறை!

mask
mask

முகக்கவசத்தை பயன்படுத்தாதவர்கள் 14 நாட்கள் சுயதனிமைப்படுத்தப்படுவார்கள் என பொலிசார் அறிவித்துள்ளனர்.

முகக்கவசத்தை பயன்படுத்தாமல் நடமாடுபவர் முதலாவது தடவை எச்சரிக்கப்பட்டு, அவரது விபரங்கள் பதிவு செய்யப்படும். மீண்டும் அவர் இதேவிதமாக நடமாடினால் 14 நாட்கள் சுயதனிமைப்படுத்தப்படுவார் என தெரிவித்துள்ளனர்.

நாளை (28) முதல் இந்த நடைமுறை அமுலாகும்.

கைகழுவுதல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டுமென பொலிசார் அறிவித்துள்ளனர்.