இரணைதீவிற்கான படகு சேவை நேற்று பூநகரி பிரதேச செயலாளரால் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.
குறித்த படகு சேவை தற்போது விசேட தேவைகள் மற்றும் விசேட நிகழ்வுகளிற்காக பயன்படுத்தப்படவுள்ளது.
இரணைமாதா கடற்தொழிலாளர் சங்கத்தின் முயற்சியினால் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியில் கொள்வனவு செய்யப்பட்டுள்ள குறித்த படகில் 50இற்கும் மேற்பட்டவர்கள் பயணிக்க முடியும் என கூறப்படுகிறது.
அத்துடன் இந்த படகு சேவைக்கான அனுமதிகள் பெறப்படாத நிலையில் அதற்கான முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இரணைமாதா கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
மேலும் இரணைமாதா நகரிலிருந்து இரணைதீவிற்கு குறித்த படகு சேவை உத்தியோகபூர்வமாக விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.