மூன்றிலிரண்டு பலத்தை நிச்சயம் பெறும் ‘மொட்டு’!

Podujana Peramuna logo
Podujana Peramuna logo

மஹிந்தவின் சகா ரத்நாயக்க கூறுகின்றார்

நாடாளுமன்றத் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்தை நிச்சயம் பெறும் என்று நுவரெலியா மாவட்ட வேட்பாளர் சீ.பீ.ரத்நாயக்க தெரிவித்தார்.

பூண்டுலோயா கலப்பிட்டிய பகுதியில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நீதியாகவும், சுதந்திரமாகவும் தேர்தல் நடைபெற வேண்டும் என்பதே ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. அதேபோல் தேர்தல் களமும் தற்போது சூடு பிடித்துள்ள நிலையில், தேர்தல் சட்டமும் கடுமையாக அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இருந்தே கூடுதலான உறுப்பினர்கள் இம்முறை நாடாளுமன்றம் செல்லவுள்ளனர். எனவே நாம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்தை நிச்சயம் பெறுவோம்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஜனாதிபதி தலைமையிலான அரசு சிறப்பான தலைமைத்துவத்தை வழங்கியுள்ளது.

தற்போது நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படுகின்றது.

எனவே, யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை மக்கள் தீர்மானித்துள்ளனர்” – என்றார்.