கட்டுநாயக்க விமான நிலையம் எப்போது திறக்கப்படும்? வெளிவந்தது தகவல்

202004060520489660 Central government to allow air service after 14th SECVPF 1

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் முழுமையாக நாட்டிற்கு அழைத்துவரப்படும் வரை கட்டுநாயக்க விமானநிலையத்தை சுற்றுலா பயணிகளுக்காக திறப்பது தாமதப்படுத்தப்படுமென அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

எனவே இந்த நடவடிக்கைக்காக விமானநிலையத்தை மீள திறக்கும் நடவடிக்கையினை ஓகஸ்ட் 15ம் திகதி வரை ஒத்திவைக்க வேண்டி வந்துள்ளதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னர் விமான நிலையம் ஓகஸ்ட் முதலாம் திகதி மீண்டும் திறக்கப்பட இருந்தது.

எனினும் இன்று காலை விஷேட அறிவிப்பை வெளியிட்ட சிவில் விமான சேவைகள் பணிப்பாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சந்திரசிறி, ஓகஸ்ட் முதலாம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் திறக்கப்படாது என்று கூறியுள்ளார்.

எனினும் பின்னர்அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, விமான நிலையத்தை திறக்கும் திகதியை அறிவித்தார்.