எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன், தாஹம் சிறிசேன பொலன்னறுவை மாவட்டத்தில் போட்டியிவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், பொதுத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இதுவரையிலும் பகிரங்கமாக அவர் அறிவிக்காத நிலையில் அவருடைய தந்தையான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், தன்னுடைய மகனின் அரசியல் பிரவேசம் தொடர்பில் இதுவரையிலும் எதுவித அறிவித்தல்களையும் வெளியிடாமை குறிப்பிடத்தக்கது.