இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் (05) நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, இலங்கையில் கொரொனா வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை (2047)ஆக அதிகரித்துள்ளது.
தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள (05) பேரும் ஓமான் நாட்டில் இருந்து தாயகம் திரும்பியவர்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் கொரொனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இதுவரையில் (1711) பேர் பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்றுக்குள்ளாகி இலங்கையில் இதுவரையில் (11) நபர்கள் உயிரிழந்துள்ளனர்.