ஐக்கிய தேசிய கட்சியினால் வடக்கு மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தினால் மீண்டும் கட்சிக்கு வாக்களிக்குமாறு மக்களிடம் கேட்பதற்கு வடக்கு அரசியல்வாதிகளுக்கு முடியாமல் போயுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் நடந்த தேர்தல்களை விடவும் இந்த தேர்தலில் வடக்கு மக்கள் வேறு விதமாக சிந்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.