நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பொருளாதார நிலைமை தொடர்பில் ஆராய்ந்து பார்க்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தொகை மதிப்பு புள்ளி விபரத் திணைக்களம் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று (03) முதல் இந்த திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இம்மாத இறுதிக்குள் மொத்த முடிவும் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.