விடுதலைப் புலிகள் என்ற அமைப்பு தற்போது இல்லை என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளரும் முன்னாள் போராளியுமான வித்தியாபதி முரளிதரன் தெரிவித்தார்.
எனினும், புலம்பெயர்ந்துள்ள சிலர் தாம் பணம் உழைப்பதற்காகவும், தங்களது சுகபோகங்களுக்காகவும் போராளிகளையும் விடுதலைப் புலிகளையும் பயன்படுத்தி வருகின்றார்கள் என்பதை இந்த அரசாங்கம் உணரவேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மட்டு. ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்தும் பேசிய அவர்,
“இன்று பல தமிழ் அரசியல் கைதிகள் விடுதலைசெய்யப்படாமல் இருப்பதற்கான காரணம் புலம்பெயர் தமிழர்களின் செயற்பாடுகளாகும்.
இந்நிலையில், முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்தினை கட்டியெழுப்பவேண்டும் என பிரதமர் மகிந்த ராஜபக்ஸவிடம் தான் கோரிக்கையினை முன்வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.