பிரிவினைவாத கருத்துக்களை உள்ளடக்குவது பிரச்சினைக்குரியது!

download 3 5
download 3 5

நாட்டின் அரசியல் கட்சியொன்று தமது அறிக்கையில் பிரிவினைவாத கருத்துக்களை வெளிப்படையாக உள்ளடக்குவது என்பது பாரிய பிரச்சினைக்குரிய விடயம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பாக போட்டியிட்ட வேட்பாளரான சஜித் பிரேமதாசவினால் “இலங்கையின் எதிர்காலத்திற்கு எல்லை இல்லை, ஒன்றாக பயணிப்போன்” என்ற கொள்கை விஞ்ஞாபனத்தின் (15-16)ஆம் பக்கங்களை சுட்டிக்காட்டியே இவ்வாறு பிரதமர் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.