ஹெரோயின் மற்றும் தோட்டாக்களுடன் பெண்கள் கைது

Thiththikfkum isaffgi copy 1

ஹுங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பட்டஅத பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஹெரோயினுடன் மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று புதன்கிழமை (08) மாலை 4.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது குறித்த பெண்களிடம் இருந்து 52 கிராம் 615 மில்லிகிராம் ஹெரோயின், 9 மில்லி மீற்றர் துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தும் தோட்டக்கள் 2, மெகசின் ஒன்று, செட்லைட் தொலைபேசி ஒன்று மற்றும் 4 கையக்க தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

32, 28 மற்றும் 33 வயதுடைய பெண்கள் மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ஹுங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.