பொலன்னறுவை – வெலிகந்த, சேனபுற பகுதியில் உள்ள புனர்வாழ்வு முகாமிலுள்ள 350க்கும் மேற்பட்ட கைதிகளுக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த கைதிகளிடம் தற்போது பரிசோதனை நடத்தப்படுகிறது.
இதன் காரணமாக குறித்த முகாம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை குறித்த முகாமில் அண்மையில் கந்தக்காடு முகாமிலிருந்து வந்த 105 கைதிகள் இருக்கின்றதாக தெரிவிக்கப்படுள்ளமை குறிப்பிடத்தக்கது.