தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டடுள்ள அறிக்கை!

625.500.560.350.160.300.053.800.900.160.90 5 6
625.500.560.350.160.300.053.800.900.160.90 5 6

நாட்டில் எதிர்வரும் பொதுத்தேர்தலை முன்னிட்டு இதுவரையில் 2,620 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், குறித்த முறைப்பாடுகளில் 683 முறைப்பாடுகள் தேசிய தேர்தல்கள் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு சபையின் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்தின் ஊடாக தேர்தல்கள் தொடர்பில் இடம்பெறும் முறைப்பாடுகளை அறிவிக்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் 0112 886179, 0112886421 மற்றும் 0112 886117 ஆகிய இலக்கங்களின் ஊடாக அறிவிக்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 0112 88 65 51 மற்றும் 0112 886552 என்ற தொலைநகல் இலக்கங்களின் ஊடாகவும் தெரிவிக்க முடியுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.