17 ஆம் திகதி வரையில் மேலதிக விடுமுறை!

School Closed crop 298x157 1000x600 1
School Closed crop 298x157 1000x600 1

நாட்டில் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி வரையில் மேலதிக விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும இதனை தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சருக்கும் கல்வித்துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் இடையில் கல்வி அமைச்சின் வளாகத்தில் இன்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.