அம்பாறை பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் கைது!

asd1 2
asd1 2

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் திகதி சாய்ந்தமருது குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பான தகவல்களை மறைத்தமை தொடர்பில் அம்பாறை பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகரான அபுபக்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை 8.30 மணியளவில் அக்கரைபற்று பகுதியில் வைத்து குறித்த பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளார்.கொழும்பு குற்றவியல் பிரிவினரே அவரை கைது செய்துள்ளதாகதெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் குண்டு தாக்குதல் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரதானியாக கடமையாற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது.