வாகன விபத்தில் குடும்பஸ்தர் பலி!

DEAD

திருகோணமலை நிலாவெளி பகுதியில், லொறி ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் குடும்பஸ்தார் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை பகுதியிலிருந்து-நிலாவெளி நோக்கி பயணித்த மீன் லொறி ஒன்றும் – மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியதில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

இச் சம்பவம் நேற்று (13) மாலை நிலாவெளி பிரதான வீதி ஆறாம் கட்டை பெரிய குளம் வளைவில் இடம் பெற்றுள்ளது.

இச் சம்பவத்தில் 07 ஆம் கட்டை இக்பால் நகரைச் சேர்ந்த (வயது -48) நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவரே உயிரிழந்தவராவர்.

திருகோணமலையிலிருந்து நிலாவெளிக்கு சென்று கொண்டிருந்த இந்த லொறி இரண்டு முச்சக்கர வண்டிகளுடன் மோதுண்டு பின்னர் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இவ் விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதியை கைது செய்துள்ளதாகவும் விபத்து தொடர்பில் விசாரணைகளை நிலாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.