கடற்படைத் தளபதி பியால் டி சில்வா அட்மிரலாக தரம் உயர்த்தப்பட்டுள்ளார்

army 3

கடற்படையின் 23ஆவது தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா, அட்மிரலாக இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் தரம்  உயர்த்தப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியினால் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர்  குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா, எதிர்வரும் ஜூலை 15 ஆம் திகதி ஓய்வு பெறவுள்ளார்.

இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவுக்கு நினைவு பரிசு ஒன்றினை நேற்று வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.