வயலுக்கு காவலுக்குச் சென்ற நபர் பலியான சோகம்

1594797256 lephant attack 2

திருகோணமலை அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வயலுக்குச் சென்ற நபரொருவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கந்தளாய் பகுதியைச் சேர்ந்த ஆரியசேன வயது 59 என்பவரே இதன்போது பலியாகியுள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்த நபர் நேற்றிரவு (14) வயலுக்கு காவலுக்குச் சென்ற நிலையிலே காட்டு யானை ஒழிந்திருந்து தாக்கியதில் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சடலம் கந்தளாய் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.