ஸ்ரீ ல.சு.க. எம்.பி.க்களுக்கு எதிராக கூச்சல்

senaviratna
senaviratna

பொதுஜன பெரமுன மேடையில் தோன்றிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு எதிராக கூச்சலிட்டவர்கள் தொடர்பில் கட்சியின் தலைமையிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட பாராளுமன்ற உறுப்பினர் டபிள்யு. டீ.ஜே. செனவிரத்ன தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் வைத்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கு கூச்சல் எழுப்பிய சம்பவங்கள் பல இடம்பெற்றுள்ளன. இது குறித்து அவரிடம் சகோதர ஊடகமொன்று வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாம் கொள்கைக்காகவே கட்சியில் இருக்கின்றோம் அதற்காக இந்தக் கூச்சலுக்கு கட்சி மாறிச் செல்ல மாட்டேன் எனவும் இந்த கூச்சல் சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவித்துள்ளேன் எனவும் பாராளுமன்ற உறுப்பினர்டபிள்யு.டீ.ஜே. செனவிரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் பேசுவதற்கு எழுந்தவுடனேயே அவர்களைப் பேச விடாது இவ்வாறு கூச்சல் போடப்பட்டுக் கொண்டே இருந்தமையினால் அவர்கள் பேசாது ஒதுங்கிக் கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளது.