அங்குலானை பகுதியில் காவல் துறை அதிகாரிகள் மீது கல்வீச்சு நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய 13 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் பெண்களும் உள்ளடங்குவதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
அண்மையில் மொரட்டுவை – லுணாவ பாலத்திற்கு அருகில் காவல்துறையினரின் பணிக்கு இடையூறு ஏற்படுத்தியதன் காரணமாக காவல்துறை உத்தியோகத்தர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
இந்தநிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து குழுவொன்று அங்குலானை காவல்நிலையத்திற்கு பதற்றம் ஏற்படுத்தியதோடு காவல்துறையினர் மீது கல்வீச்சு தாக்குதலும் நடாத்தியுள்ளனர்.
எவ்வாறாயினும் நிலைமையை கட்டுப்பாடுக்குள் கொண்டு வருவதற்காக காவல்துறையினரால் கண்ணீர்புகை பிரயோகம் நடாத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.
அத்துடன் குறித்த துப்பாக்கி பிரயோகம் தொடர்பான வழக்கு மொரட்டுவை நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற போது சம்பவத்தில் உயிரிழந்தவரின் உறவினர்கள் நீதிமன்றத்திற்கு முன்பாக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.