எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பினை எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் வெளியிட எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
பிரதமர் தலைமையில் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்ட பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த கலந்துரையாடலில் சுகாதார செவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க உட்பட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.