13 காவல்துறை அதிகாரிகள் தனிமைப்படுத்தலில்!

images 21
images 21

ஹிங்குராங்கொடை காவல் நிலையத்தை சேர்ந்த 13 காவல் துறை அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த அதிகாரிகள் காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள வீடொன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கந்தகாடு போதை பொறுள் மறுவாழ்வு மையத்தில் உள்ள அதிகாரி ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து குறித்த 13 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த கொரோனா தொற்றாளர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த காவல் நிலையத்திற்கு வந்து சென்றமையே இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.