தனிமைப்படுத்தப்பட்டுள்ள 45 பிக்குகள்!

unnamed 36
unnamed 36

கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மொனராகலை மாவட்டத்தில் 45 பிக்குகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

படல்கும்புற, கல்பொட பிரிவெனா விகாரையை சேர்ந்த 45 பிக்குகள் உட்பட 72 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கந்தக்காடு முகாமில் பணிபுரியும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட இராணுவ சிப்பாய் குறித்த விகாரைக்கு வழிபட சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்தே மேற்கண்ட 72 பேரும் அந்த விகாரையிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.