ஏப்ரல்-21 தாக்குதல்: சந்தேகநபர்கள் மேலும் 14 நாட்கள் விளக்கமறியலில்

april 21
april 21

ஏப்ரல்-21 பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் பெயரில் அண்மையில் கைதான 13 பேரையும் மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டது.

சந்தேகநபர்களினதும் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டு எதிர்வரும் ஒக்டோபர் 30ஆம் திகதி வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு கல்முனை நீதிமன்ற நீதிபதி ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் இன்று (Oct.16) இருவேறு சந்தர்ப்பங்களில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது ஆஜர்படுத்தப்பட்டவர்கள் 6 பேராகவும், 7 பேராகவும் இருவேறு சந்தர்ப்பங்களில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இவ்வாறு விசாரணைக்காக வந்த சந்தேகநபர்கள் அனைவரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் பாதுகாப்பு தரப்பினர்களால் அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த காலங்களில் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் இருந்து கைதாகி பல மாதங்களுக்கு மேலான தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.