மானை வேட்டையாடிய நபர் திருமலையில் கைது

Thiththikfkum isaffgi copy 1 620x330 3

திருகோணமலை கோமரங்கடவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மான் ஒன்றினை வேட்டையாடிய ஒருவரை நேற்றிரவு செவ்வாய்கிழமை (20) கைது செய்துள்ளதாக கோமரங்கடவெல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நான்காம் வட்டாரம், புல்மோட்டை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே வேட்டையாடிய மானுடன் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் கோமரங்கடவெல மீகஸ்வெவ காட்டுப் பகுதியில் மான் ஒன்றினை வேட்டையாடி கொண்டு சென்ற போதே அப்பகுதியில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த வேளையில் வேட்டையாடிய மானுடன் கைது  செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரை தடுத்து வைத்துள்ளதோடு இன்றைய தினம்(21) திருகோணமலை நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.