ஆணைக்குழுவில் நாளை முன்னிலையாக முடியாது!!

ranil 1
ranil 1

அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் ஊழல் மோசடிகள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நாளை 18 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த தினத்தில் முன்னிலையாக முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் சில நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளதால் ஆணைக்குழுவில் முன்னிலையாக முடியாது என பிரதமர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், எதிர்வரும் 23ஆம் திகதி முற்பகல் 10.30 மணிக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அறிவிக்கவுள்ளதாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இந்த அறிவிப்பு எழுத்து மூலம் அவருக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.