புத்தளத்தில் ஐஸ் ரக போதைப்பொருளுடன் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களுள் மதுவரித் திணைக்களத்தின் அதிகாரி ஒருவரும் மற்றும் 4 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
புத்தளம் ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, 200 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, குறித்த போதைப்பொருளை சந்தேகநபர்களுக்கு பெற்றுக் கொடுத்த மற்றுமொரு மதுவரித் திணைக்கள அதிகாரி ஒருவரை கைது செய்வதற்காக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.