சாரதி அனுமதி பத்திரத்திற்கு புள்ளிகள் வழங்கும் திட்டம்!

lision
lision

இலங்கை சாரதி அனுமதி பத்திரங்களுக்கு புள்ளிகள் வழங்கும் முறையை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதற்கமைய சாரதி அனுமதி பத்திரம் ஒன்றிற்கு 24 புள்ளிகள் வழங்கப்படும் என்பதோடு சாரதிகளால் வீதி விதிமுறைகள் மீறப்படுகின்ற போதிலும் விபத்துக்களை ஏற்படுத்துகின்ற போதிலும் அனுமதிப்பத்திரத்தில் வழங்கப்பட்டிருக்கும் புள்ளிகள் குறைக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வாகன மற்றும் வீதி விபத்துக்களின் போது சாரதிகளுக்கு அபராதம் மற்றும் தண்டனை வழங்கப்படுவது தற்போது நடைமுறையில் காணப்படுகின்றது.

இந்த விதிமுறையுடன் சாரதி அனுமதி பத்திரத்திற்கு புள்ளிகள் வழங்கும் திட்டத்தையும் நடமுறைப்படுத்தவுள்ளதாகவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.