தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர்கள் யாழ் ஆயரை இன்று வியாழக்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
கூட்டமைப்பின் வேட்பாளரான தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையிலான வேட்பாளர்கள் யாழ் ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையை ஆயர் இல்லத்தில் சந்தித்தனர்.
இந்தச் சந்திப்பில் வேட்பாளர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறிதரன், திருமதி சசிகலா ரவிராஜ், இமானுவேல் ஆர்னோல்ட்,மற்றும் தபேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இதன் போது சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பிலும் தேர்தல் கள நிலைமைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.