நீராவியடி பிள்ளையார் பொங்கல் ஆரம்பம்!

IMG 7598288023bb28effa21f19fd3b21d92 V1 696x522 1

முல்லைத்தீவு, பழைய செம்மலை, நீராவியடி பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் நிகழ்வு இன்று (24) காலை ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

நேற்றைய தினம், ஏற்பாட்டாளர்களிற்கு பொலிசார் சில கட்டுப்பாடுகளை விதிக்க முயன்ற நிலையில், இன்று சுமுகமான நிலையில் பொங்கல் இடம்பெற்று வருகிறது.

இன்று அதிகாலை 3 மணிக்கு கொக்குத்தொடுவாய் பிள்ளையார் ஆலயத்திலிருந்து மடைப்பண்டம் எடுத்து வரப்பட்டு, ஆலயத்தில் பூசை வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.

ஆலய சூழலில் பொலிசார், இராணுவத்தினர் வழக்கத்தை விட அதிகமாக நிறுத்தப்பட்டுள்ளனர். ஆலயத்தில் தகரக் கொட்டகை அமைக்கும் பணியில் ஆலய நிர்வாகம் நேற்று ஈடுபட்டிருந்த நிலையில், அதை பொலிசார் தடுக்க முனைந்தமை குறிப்பிடத்தக்கது.