வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக பொனிபேஸ் பெரேரா?

army 4

ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் பொனிபேஸ் பெரேரா வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்படலாமென கூறப்படுகின்றது.

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலினை தொடர்ந்து குறித்த நியமனம் வழங்கப்படலாமென அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வன்னி ஆயுதப்படைகளின் கட்டளை தளபதியாகவும், புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கான அதிகாரியாகவும் இராணுவஅதிகாரி மேஜர் ஜெனரல் பொனிபேஸ் பெரேரா கடமையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.