வெளிநாடுகளில் தங்கியிருந்த மேலும் 43 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்

kadunayaka 3

வெளிநாடுகளில் தங்கியிருந்த மேலும் 43 இலங்கையர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை, விசேட விமானமொன்றில் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

கட்டாரில் இருந்து 13 பேரும் சென்னையில் இருந்து 30 பேரும் இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளதாக  கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இவர்கள் அனைவரும் பி.சி.ஆர்.பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை இதுவரை 25,734 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்து, தங்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் முப்படையினரால் நடத்திச் செல்லப்படும் 44 மத்திய நிலையங்களில் 4,535 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 2,753 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 11 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.