கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

5 6

நாட்டில் இன்றையதினம் வெள்ளிக்கிழமை மேலும் 17 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவர்களில்,  8 பேர் கோகொட இராணுவ வைத்தியசாலையிலிருந்தும்,அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலை  மற்றும் இரணவில வைத்தியசாலையிலிருந்தும் தலா 4 பேரும், ஒருவர் கொழும்பு கிழக்கு வைத்தியசாலையிலிருந்தும் பூரண குணமடைந்து வெளியேறியுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,094  ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் 2,753 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதில் 648 பேர் நாடு முழுவதும் உள்ள 09 வைத்தியசாலையில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.

அத்துடன் 63 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர்.

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 11 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.