இரும்பு பொல்லால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை

1595662809 Crime 2

இங்கிரிய பொலிஸ் பிரிவின் ஊருகல பிரதேசத்தில் இரும்பு பொல்லு ஒன்றில் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது…..

சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் 54 வயதுடைய இங்கிரிய பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.