நாட்டின் ஐ.டி.எச் மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றிருந்த கொரோனா தொற்றாளர், தாம் பயணித்திருந்த பாதை தொடர்பில் காவல்துறையினரிடம் போலியான தகவல்களை வழங்கியுள்ளமை தற்போது தெரியவந்துள்ளமை குறிப்பிட்த்தக்கது.
இதன்படி, மீண்டும் குறித்த நபரிடம் விரிவான விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நேற்று 25 அதிகாலை கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற குறித்த கொரோனா தொற்றாளர் சுமார் 8 மணிநேரத்திற்கு பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.