நாட்டின் முன்பள்ளி சார்ந்த பிரச்சினைகளை அமைச்சகத்திற்கு கீழ் கொண்டு வந்து அதனை தீர்ப்பதற்கான திட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக ஜனாதிபதி கலந்து கொண்ட மக்கள் சந்திப்புக்களில் மக்கள் தெரிவித்த விடயங்களை அடிப்படையாக கொண்டு இந்த திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மாத்தரை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போது அவர் மேலும் தெரிவித்ததாவது முன்பள்ளி ஆசிரியர்களுக்கான வேதன பிரச்சினைக்கான தீர்வும் வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.