பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கருத்து!

45462754 793874610945136 4845672615487995904 n 1
45462754 793874610945136 4845672615487995904 n 1

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு பின்னர் பொருந்தோட்ட மக்களுக்கான ஆயிரம் ரூபா வேதனத்தை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஹப்புத்தளையில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்துரைத்த போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதனை கூறியுள்ளார்.

மறைந்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இறுதியாக பெருந்தோட்ட மக்களுக்கான ஆயிரம் ரூபா வேதனம் தொடர்பிலேயே கோரியிருந்தார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு பின்னர் பெருந்தோட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடவுள்ளோம்.

அவர்களுடன் கலந்துரையாடி பெருந்தோட்ட மக்களுக்கான ஆயிரம் ரூபா வேதனத்தை பெற்றுக் கொடுக்கும் செயற்பாட்டில் ஈடுபடவுள்ளோம்.

இந்தநிலையில் பெருந்தோட்ட பகுதிகளில் சேவையாற்றுபவர்களுக்கு மாத்திரமே கடந்த நாட்களில் வீடுகள் வழங்கப்பட்டன. இதனால் பொதுத் தேர்தலுக்கு பின்னர் வாக்கு சீட்டில் பெயரிடப்பட்டுள்ளவர்களுக்கு வீடுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

எதிர்கால சமூகத்தினருக்கு சிறந்த கல்வியை வழங்குவதே தற்போதைய அரசாங்கத்தின் பிரதான நோக்கம் எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.