நாட்டில் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவினால் வழங்கப்படும் துப்பாக்கிகளை பழுது பார்க்கும் இடம் ஒன்று ருவன்வெல்ல – ரத்தாகல பகுதியில் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
காவல்துறையின் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைவாக குறித்த இடம் இன்று முற்பகல் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
அங்கு போரா 12 ரக தோட்டாக்களும், 8 துப்பாக்கிகளும் மேலும் சில வெடிப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பில் 50 வயதுடைய சந்தேகநபர் ஒருவரையும் கைது செய்துள்ளதாக காவல்துறையின் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.