நிமல் சிறிபால டி சில்வாவுக்கு எதிராக கோஷங்கள்:மகிந்த ராஜபக்ச!

17 rajapakse300 2 3
17 rajapakse300 2 3

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பதுளை மற்றும் மஹியங்கனையில் ஒழுங்கு செய்திருந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கூட்டம் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெற்றுள்ளது. பிரதமர் மகிந்த ராஜபக்ச பதுளை மாவட்டத்தில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் விருப்பு வாக்கு இலக்கங்களை அறிவித்து உரையாற்றியுள்ளார்.

இதன் போது நிமல் சிறிபால டி சில்வாவின் பெயர் மற்றும் விருப்பு வாக்கு இலக்கத்தை கூறும் போது கூட்டத்தில் இருந்தவர்கள், அதற்கு எதிராக ஹூ கோஷமிட்டுள்ளனர். இதனையடுத்து பிரதமர் தலையிட்டு அவர்களை சமாதானப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.