அமெரிக்க அதிபரின் உத்தரவுக்கமைய சீன தூதரக கதவை உடைத்து பொலிஸார் மற்றும் அதிகாரிகள் உள்ளே புகுந்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
அமெரிக்காவின் உத்தரவை தொடர்ந்து ஹூஸ்டனில் உள்ள, உளவு பார்க்கும் மையமாக செயல்பட்டு வந்த சீன தூதரகம் நேற்று மூடப்பட்டதோடு, அதில் பணி புரிந்தவர்களும் சுமார் 04 மணியளவில் வெளியேறியுள்ளனர்.
அவர்கள் வெளியேறிய சற்று நேரத்தில் அங்கு வந்த அமெரிக்க அதிகாரிகள் அந்த தூதரகத்தின் பின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து ஆய்வு செய்துள்ளனர்.
ஹூஸ்டனில் உள்ள சீன தூதரகம் விலைமதிப்பற்ற மருத்துவ ஆராய்ச்சிகளை திருடுவதற்காக சீன அரசால் பயன்படுத்தப்பட்டதாகவும், எண்ணெய் மற்றும் எரிவாயு தொழில்துறையில் மூக்கை நுழைக்க முயன்றதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த தூதரக அலுவலகம், அமெரிக்காவால் நுழைய முடியாத அளவு இரும்புக்கோட்டை போல் இருந்ததாகவும், பல முக்கிய உளவு வேலைகளை ஒருங்கிணத்து செயல்படுத்தும் தகவல் தொடர்பு மையமாக செயல்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.