கொரோனா தொற்று காரணமாக, மக்களின் பொருளாதா நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தங்கம் விலை கணிசமாக அதிகரித்துள்ளது.
ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை வார இறுதியில் 1,900 அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளதோடு 2011ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்தளவு அதிகரித்திருப்பது இதுவே முதல்முறையாகும்.
கடந்த வாரத்தில் மாத்திரம் உலக சந்தையில் தங்கத்தின் விலை நூற்றுக்கு 4 வீதமாக உயர்ந்துள்ளது. அதேபோல உலகின் மிகப்பெரிய தங்க வாடிக்கையாளர்களை கொண்ட நாடான இந்தியாவில் தங்கத்தின் விலையானது 30 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது.