கொரோனா தொற்றின் இரண்டாம் அலைக்கு முகம் கொடுத்துள்ள அவுஸ்திரேலியாவில் நேற்றைய தினமே அதிகளவான உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.
அவுஸ்திரேலியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா தொற்றால் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் 459 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும் கொவிட் 19 தொற்றுறுதியானவர்கள் தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அவுஸ்திரேலியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 14403 பாதிக்கப்பட்டுள்ளதுடன் 155 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.