கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தின் தற்போதைய நிலை

KADAKADU

இதுவரையில் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் ஆரம்பித்த கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 597 ஆக பதிவாகியுள்ளது கொவிட்-19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

அவர்களுள் புனர்வாழ்வளிக்கடும் கைதிகள் 482 பேர், பணியாளர்கள் 65 பேர், மேலதிக பணியாளர்கள் 5 பேர், அவர்களின் குடும்பம் மற்றும் தொடர்பில் இருந்தவர்கள் 44 பேர் மற்றும் வெலிகட சிறைக்கைதியுடன் தொடர்பில் இருந்த ஒருவர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை நேற்று 23 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களுள் 17 பேர் சேனபுர புனர்வாழ்வு மத்திய நிலையத்தை சேர்ந்தவர்கள் எனவும், 5 பேர் கட்டாரில் இருந்தும் ஒருவர் சௌதியில் இருந்து வருகை தந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.