யாழ்போதனா வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்ட கடற்படை வீரருக்கு கொரோனா

74609808

யாழ்ப்பாணத்தில் பணியாற்றும கடற்படைவீரர் ஒருவர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது. யாழ்ப்பாணத்திற்கு கடமைக்காக வந்த கடற்படைவீரர் உடல்நிலை பாதிக்கப்பட்டார்

எனவும் இதனை தொடர்ந்து யாழ்போதனா வைத்தியசாலையின் 7ம் இலக்க நோயாளர் விடுதியில் அனுமதிக்கப்பட்ட இவரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது அவர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது எனவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து குறிப்பிட்ட விடுதியில் பணியாற்றிய மருத்துவர்கள் தாதிமார்கள் உட்பட அனைவரையும் தனிமைப்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குறிப்பிட்ட கடற்படை வீரர் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தல் காலம் முடிவடைந்த பின்னர் யாழ்ப்பாணத்துக்கு பணிக்காக அனுப்பபட்டவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.