மாகந்துரே மதூஷின் உதவியாளர் ஒருவர் கைது

ARREST sattamani 3

திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவின் தலைவரான மாகந்துரே மதூஷின் நெருங்கிய உதவியாளர் ஒருவர் கொழும்பு – வாழைத்தோட்டம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாழைத்தோட்டம், மிரானியா வீதி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது 2 கிராம், 350 மில்லிகிராம் ஹெரோயினுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கொழும்பு -12, மிரானிய வீதியை சேர்ந்த குறித்த சந்தேக நபர் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவின் உறுப்பினராவார்.

மாகந்துரே மதூஷ் கைது செய்யப்படுவதற்கு முன்னர் துபாயில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வில் கலந்துகொண்ட ஒருவரே வாழைத்தோட்டம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.