சட்டத்திற்கு முரணான விதத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட சனத் நிசாந்த

puttalam
puttalam

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிசாந்த தனது தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் சட்டத்திற்கு முரணான வகையில் செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகன இலக்கத் தகடு அற்ற உந்துருளியில் தலைக்கவசம், முகக் கவசம் எதுவும் இன்றி அவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பிலான விசாரணைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு பதில் காவல்துறைமா அதிபர், வடமேல் மாகாண பிரதி காவல்துறைமான அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும்இது குறித்த புகைப்படங்களும், காணொளியும் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் நிலையில் இது குறித்த விசாரணைகளையும் மேற்கொண்டு அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும் பதில் காவல்துறைமா அதிபரி அறிவித்துள்ளார்